அகநூல்கள் - One Line Questions

1. அகநானூற்றில் பாலைத் திணைப் பாடல்கள் வரும் எண்கள் எவை? 1, 3, 5...
2. அகநானூற்றின் 'நித்திலக் கோவை' பகுதியில் எத்தனை பாடல்கள் உள்ளன? 100
3. அகநானூற்றின் மூன்று பிரிவுகளில் 'களிற்றியானை நிரை' எத்தனை பாடல்களைக் கொண்டது? 120
4. கலித்தொகையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை என்ன? 150
5. அகநானூற்றின் 'மணிமிடை பவளம்' பகுதியில் எத்தனை பாடல்கள் உள்ளன? 180
6. பரிபாடலில் இன்று நமக்குக் கிடைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை எவ்வளவு? 22
7. நற்றிணையின் அடி எல்லை என்ன? 9 - 12
8. குறுந்தொகையின் அடி எல்லை என்ன? 4 - 8
9. குறுந்தொகையில் உள்ள மொத்தப் பாடல்களின் எண்ணிக்கை என்ன? 401
10. சங்க இலக்கியத்தில் அகநூல்கள் மொத்தம் எத்தனை? 5
11. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அகப்பொருள் நூல்கள் எத்தனை? 6
12. ஐங்குறுநூற்றில் நெய்தல் திணைப் பாடல்களைப் பாடியவர் யார்? அம்மூவனார்
13. அகநானூற்றின் பாடல்கள் எத்தனை பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன? மூன்று
14. அகநானூற்றைத் தொகுப்பித்தவர் யார்? உக்கிரப் பெருவழுதி
15. அகநானூறு எந்தத் தொகுப்பைச் சார்ந்தது? எட்டுத்தொகை
16. சங்க இலக்கிய அகநூல்களில் மிகச்சிறிய அடி எல்லை கொண்ட நூல் எது? ஐங்குறுநூறு
17. ஐங்குறுநூறு நூலின் பாடல்கள் எந்தத் திணையை அடிப்படையாகக் கொண்டவை? ஐந்திணை
18. ஐங்குறுநூற்றில் பாலைத் திணைப் பாடல்களைப் பாடியவர் யார்? ஓதலாந்தையார்
19. ஐங்குறுநூற்றில் மருதத்திணைப் பாடல்களைப் பாடியவர் யார்? ஓரம்போகியார்
20. திணைமொழி ஐம்பது நூலின் ஆசிரியர் யார்? கண்ணன் சேந்தனார்
21. திணைமாலை நூற்றைம்பது நூலின் ஆசிரியர் யார்? கனிமேதாவியார்
22. ஐங்குறுநூற்றில் குறிஞ்சித் திணைப் பாடல்களைப் பாடியவர் யார்? கபிலர்
23. கலித்தொகையின் 'குறிஞ்சிக்கலி'யைப் பாடியவர் யார்? கபிலர்
24. அகநானூற்றில் ஒற்றைப்படை எண்களில் அமைந்த பாடல்கள் எத்திணைக்கு உரியவை? பாலை
25. அகநானூற்றில் 2, 8 ஆகிய எண்களில் வரும் பாடல்கள் எத்திணைக்கு உரியவை? குறிஞ்சி
26. கலித்தொகையை முதன்முதலில் பதிப்பித்தவர் யார்? சி.வை. தாமோதரம் பிள்ளை
27. ஐங்குறுநூறு நூலின் பாட்டுடைத் தலைவன் யார்? சேர மன்னர்கள்
28. கலித்தொகையின் 'முல்லைக்கலி'யைப் பாடியவர் யார்? சோழன் நல்லுருத்திரன்
29. கலித்தொகைக்கு உரை எழுதியவர் யார்? நச்சினார்க்கினியர்
30. கலித்தொகையைத் தொகுத்தவர் யார்? நல்லந்துவனார்
31. கலித்தொகையின் 'நெய்தல்கலி'யைப் பாடியவர் யார்? நல்லந்துவனார்
32. அகநானூற்றின் வேறு பெயர் என்ன? நெடுந்தொகை
33. அகநானூற்றின் எந்தத் திணைப் பாடல்கள் 10, 20, 30 என வரும் எண்களில் அமையும்? நெய்தல்
34. நற்றிணை நூலைத் தொகுப்பித்தவர் யார்? பன்னாடு தந்த மாறன் வழுதி
35. எட்டுத்தொகை நூல்களில் அகப்பொருள் மற்றும் புறப்பொருள் இரண்டையும் கொண்ட நூல் எது? பரிபாடல்
36. கைந்நிலை நூலின் ஆசிரியர் யார்? புல்லங்காடனார்
37. கலித்தொகையின் 'பாலைக்கலி'யைப் பாடியவர் யார்? பெருங்கடுங்கோ
38. குறுந்தொகைக்கு கடவுள் வாழ்த்து பாடியவர் யார்? பெருந்தேவனார்
39. அகநானூற்றின் கடவுள் வாழ்த்துப் பாடியவர் யார்? பெருந்தேவனார்
40. நற்றிணை நூலுக்கு கடவுள் வாழ்த்து பாடியவர் யார்? பெருந்தேவனார்
41. ஐங்குறுநூறு நூலின் ஆசிரியர் யார்? ஒரே ஆசிரியர் இல்லை
42. ஐங்குறுநூற்றில் முல்லைத் திணைப் பாடல்களைப் பாடியவர் யார்? பேயனார்
43. கார் நாற்பது நூலின் ஆசிரியர் யார்? மதுரை கண்ணன் கூத்தனார்
44. கலித்தொகையின் ஐந்து திணைகளில் 'மருதக்கலி'யைப் பாடியவர் யார்? மருதன் இளநாகனார்
45. அகநானூற்றின் எந்தத் திணைப் பாடல்கள் 6, 16, 26 என வரும் எண்களில் அமையும்? மருதம்
46. ஐந்திணை ஐம்பது நூலின் ஆசிரியர் யார்? மாறன் பொறையனார்
47. அகநானூற்றின் எந்தத் திணைப் பாடல்கள் 4, 14, 24 என வரும் எண்களில் அமையும்? முல்லை
48. ஐந்திணை எழுபது நூலின் ஆசிரியர் யார்? மூவாதியார்
49. ஐங்குறுநூறு நூலைத் தொகுப்பித்தவர் யார்? யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை
50. அகநானூறு எந்தப் பாவகையால் ஆனது? ஆசிரியப்பா