அகப்பொருள் மற்றும் புறப்பொருள் - One Line Questions

1. காதல் ஒழுக்கம் பற்றியது எது? அகப்பொருள்
2. வீர ஒழுக்கம் பற்றியது எது? புறப்பொருள்
3. குறிஞ்சி நிலத்தின் கருப்பொருள் எது? அகில், வேங்கை
4. மருத நிலத்திற்குரிய தெய்வம் யார்? இந்திரன்
5. தும்பைத்திணை எதனைக் குறிக்கிறது? இரு மன்னர்களும் போரிடல்
6. முல்லை நிலத்தின் கருப்பொருள் எது? இருப்பை மரம்
7. கோட்டையைக் காப்பவர்கள் சூடும் பூ எது? உழிஞை
8. பாலை நிலத்தின் கருப்பொருள் எது? இருப்பை, ஓமை
9. தொல்காப்பியர் அகப்பொருளை எத்தனை வகைகளாகப் பிரிக்கிறார்? ஏழு
10. அகத்திணையில் கைக்கிளை என்பது யாது? ஒருதலைக் காமம்
11. மீட்கப்பட்ட ஆநிரைக்காகச் சூடும் பூ எது? கரந்தை
12. அகப்பொருள் இலக்கணத்தில் முதற்பொருள் எவற்றை உள்ளடக்கியது? நிலம் மற்றும் பொழுது
13. கரந்தைத்திணை எதனுடன் தொடர்புடையது? கவரப்பட்ட ஆநிரைகளை மீட்டல்
14. மருத நிலத்தின் கருப்பொருள் எது? காஞ்சி, வஞ்சி
15. கஞ்சித்திணைக்குரிய பூ எது? காஞ்சிப் பூ
16. புறப்பொருள் எதனைப் பற்றி விளக்குகிறது? வீரம், கொடை, கல்வி
17. முல்லை நிலத்திற்குரிய பொழுது எது? கார்காலம்
18. மாலை என்பது எந்த நிலத்திற்குரிய சிறுபொழுது? முல்லை
19. யாமம் எந்த நிலத்திற்குரிய சிறுபொழுது? குறிஞ்சி
20. வைகறை எந்த நிலத்திற்குரிய சிறுபொழுது? மருதம்
21. குறிஞ்சி நிலத்திற்குரிய பெரும்பொழுது எது? கூதிர், முன்பனி
22. உழிஞைத்திணை எதனை விளக்குகிறது? கோட்டையை முற்றுகையிடுதல்
23. பாடாண் திணை என்பது எதனைப் பாடுவது? ஒருவனின் வீரம், கொடை, கல்வி
24. குறிஞ்சி நிலத்திற்குரிய தெய்வம் எது? முருகன்
25. அகப்பொருள் இலக்கணம் கூறும் நூல்களில் முதன்மையானது எது? தொல்காப்பியம்
26. சிறுபொழுது என்பது ஒரு நாளின் எத்தனை பிரிவுகளைக் குறிக்கும்? ஆறு
27. எற்பாடு எந்த நிலத்திற்குரிய சிறுபொழுது? நெய்தல்
28. புறப்பொருள் வெண்பாமாலை கூறும் புறத்திணைகளின் எண்ணிக்கை யாது? பன்னிரண்டு
29. கைப் பெருந்தகைமை என அழைக்கப்படும் திணை எது? பாடாண் திணை
30. நண்பகல் எந்த நிலத்திற்குரிய சிறுபொழுது? பாலை
31. மருத நிலத்திற்குரிய உரிப்பொருள் எது? ஊடல்
32. நெய்தல் நிலத்திற்குரிய உரிப்பொருள் எது? இரங்கல்
33. முல்லை நிலத்திற்குரிய உரிப்பொருள் எது? இருத்தல்
34. குறிஞ்சி நிலத்திற்குரிய உரிப்பொருள் எது? புணர்தல்
35. பாலை நிலத்திற்குரிய உரிப்பொருள் எது? பிரிதல்
36. நெய்தல் நிலத்தின் கருப்பொருள் எது? புன்னை, ஞாழல்
37. பெருந்திணை என்பது யாது? பொருந்தாக் காமம்
38. வஞ்சித்திணை உணர்த்தும் பொருள் யாது? மண் ஆசை கருதிப் போரிடுதல்
39. காஞ்சித்திணை எதனைக் குறிக்கிறது? மண்ணின் நிலையாமையை உரைத்தல்
40. வெட்சித் திணை எதனைக் குறிக்கிறது? ஆநிரைகளைக் கவர்தல்
41. தமிழின் அகப்பொருள் இலக்கணம் எதனைப் பற்றி விளக்குகிறது? தலைவன் தலைவியின் காதல்
42. நிலமும் பொழுதும் எதனுள் அடங்கும்? முதற்பொருள்
43. தெய்வம், உணவு, விலங்கு போன்றவை எதனுள் அடங்கும்? கருப்பொருள்
44. அகப்பொருளில் உரிப்பொருள் எத்தனை வகைப்படும்? ஐந்து
45. நெய்தல் நிலத்திற்குரிய தெய்வம் எது? வருணன்
46. போரில் வெற்றி பெற்ற மன்னன் சூடும் பூ எது? வாகை
47. புறப்பொருள் வெட்சித்திணைக்குரிய பூ எது? வெட்சி
48. ஆநிரை கவரச் செல்பவர்கள் சூடும் பூ எது? வெட்சி
49. வாகைத்திணை எதனை உணர்த்துகிறது? வெற்றியைப் பாடுதல்
50. பாலை நிலத்திற்குரிய பெரும்பொழுது எது? வேனில், பின்பனி